5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் – தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பு.!

Default Image

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

பின்னர் வழக்கை விசாரித்த வந்த நீதிபதி செந்தூர்பாண்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ.20,000 அபராதமும், அவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பிள்ளை ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்