இன்ஸ்டா காதல் ..அம்மாவின் நகைகளுடன் வீட்டை வீட்டு ஓடிய 15 வயது சிறுமி! இதுக்கு தானா?

Instagram Lovers

திருப்பூர்: இன்ஸ்டாவில் 17 வயது சிறுவனை காதலித்த 15 வயது சிறுமி நகைகளுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த 15 வயது சிறுமி சமூக ஆப்பான இன்ஸ்டா மூலம் 17 வயது சிறுவனின் அறிமுகம் பெற்று பேசி வந்திருக்கிறார். அதன் பின் இருவரும் இன்ஸ்டாவில் தங்களது காதலை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், அந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமியிடம் ‘ஐபோன் வாங்கி தா’ என்று கேட்டுருக்கிறார்.

இதனால், அம்மாவின் 7 சவரன் நகைகளுடன் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும், நகைகளுடன் சிறுமியை காணாமல் போனதால் பதற்றமடைந்த அந்த சிறுமியின் பெற்றோர்கள் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர். தீவிர தேடுதலின் மூலம் காவல் துறையினர் அந்த சிறுமியின் இருப்பிடத்தை கண்டுபுடித்துள்ளனர்.

அதன் பின், பிடிபட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமியின் அம்மாவின் நகைகளை விற்று ஆளுக்கு ஒரு ‘ஐபோன்’ வாங்கியதாக தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த குறிப்பிட்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்