வயிற்று வலியால் துடித்த 12 வயது சிறுமி.! பரிசோதனையில் வெளியான பகிர் அதிர்ச்சி .!

Default Image
  • பல்லடத்தை சார்ந்த 12 வயது சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
  • கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.மருத்துவ பரிசோதனையில் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் இவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொண்டனர். ஆனாலும் அந்த சிறுமிக்கு வயிற்று வலி குணம் ஆகாததால் கடந்த 30-ம் தேதி அந்த சிறுமியை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிறுமியின் வயிறு சற்று வீங்கி இருப்பதை பார்த்து உள்ளன. இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கலாம் என எண்ணி கர்ப்பத்திற்கான பரிசோதனை செய்து உள்ளனர்.பரிசோதனையில் சிறுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் யாரோ ஏமாற்றி பலாத்காரம் செய்து இருக்கலாம் என கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.இது குறித்து காவல் துறையினர் கூறுகையில் , சிறுமி மற்றும் பெற்றோர் மருத்துமனையில் இருப்பதால் விசாரணை சற்று தொய்வுவாக உள்ளது.

அவர்கள் வீட்டிற்க்கு  வந்தவுடன் முழுவீச்சில் விசாரணை நடைபெறும் என போலீசார் கூறியுள்ளனர்.மேலும் சிறுமியை பலாத்காரம் செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan