கோவை இளைஞர் கொலை வழக்கு.! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.! 

Judgement

கோவை: 2015இல் பட்டியலின இளைஞர் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு கோவையில் ஒரு கிரிக்கெட் மைதானத்தில், கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தாமரை கண்ணன் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்றது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 பேரில் ஒருவர் வழக்கு நடைபெற்ற இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்தார். ஒருவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். மீதம் உள்ள 12 பேர் குற்றவாளிகள் என உத்தரவிடப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரில் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான் , சுரேஷ், பிரகாஷ், நவீன், விமல், கௌதம், கலைவாணன் ஆகிய 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது .

கிறிஸ்டோபர்  கருப்பு கௌதம் ஆகியோருக்கு ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் இன்று தீர்ப்பு உத்தரவு வெளியான பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
Edappadi Palanisamy
ramandeep singh yuvraj singh
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump