புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் மூன்று நாட்கள் பேரவை கூட்டத்தில் இவர் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டசபை அமர்வு மீண்டும் திறந்தவெளியில் நடைப்பெற்றது.
இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலவர் உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இதனை அறிவுறுத்தியுள்ளார்.
unknown node