சிறந்த தலைவரும் போராட்ட வீரருமாகிய காந்திஜிக்கு பிறந்ததினத்தில் அஞ்சலி செலுத்துகிறேன் என எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.
இந்திய விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரராகிய மகாத்மா காந்தி அவர்களின் 151 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் பல்வேறு அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் குடியரசுத் தலைவர் என பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் தலைவராகிய எல்.முருகன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்களுக்கு அவரது பிறந்த நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர் ஒரு சிறந்த தலைவர் மட்டுமல்லாமல், சுதந்திர போராட்ட வீரர். இனிய காந்தி ஜெயந்தி என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node