நிவர் புயல் : நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு!

As Hurricane Nivar approaches, the fifth hurricane cage has been installed in Naga a Fifth storm cage at Naga and Karaikal

நிவர் புயல் நெருங்கி வருவதால், நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடும் சூறாவளிப் புயலாக உருவாகியுள்ள நிலையில், வருகிற புதன்கிழமை காரைக்கால் மாமல்லபுரம் இடையேயான கரையை இந்த புயல் கடக்கும் என வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி முதல் விசாகப்பட்டினம் வரை உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தற்பொழுது நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

நிவர் புயல் : நாகை மற்றும் காரைக்காலில் ஐந்தாம் எண் புயல் கூண்டு!