#BREAKING: அன்பழகனிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்.!

அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தேன் என  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நலம் விசாரித்தேன் என  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்  அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

unknown node

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.