"அமைச்சர் தங்கமணி விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும்"- மு.க.ஸ்டாலின்!

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததார்.

கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்,மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின், நலம் விசாரித்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

unknown node

அதில் அவர், கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர்தங்கமணியை தொலைபேசியில் தொடர்புகொண்தாகவும், அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக அந்த பதிவில் தெரிவித்தார்.

மேலும், பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.