கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக முதல்வர் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ் உட்பட ஏழு பேருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச அவர்களுக்கு தடை விதிக்கவும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட இழப்பீடு வழங்க கோரி முதலமைச்சர் வழக்கு தொடர்ந்தார்..
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்வர் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மனுத்தாக்கல் செய்தார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.