முடி உதிர்வுக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் தற்கொலை..! இளைஞரின் பரபரப்பு கடிதம்…!

Default Image

கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் முடி உதிர்வு காரணமாக தற்கொலை. 

கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு வயது 24. இவர் முடி உதிர்வு பிரச்சினை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் கூறுகையில் மருந்தை முதலில் சாப்பிடும் போது முடி முழுவதும் உதிர்ந்து விடும். அதன் பின் நன்றாக வளரும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்த பிரசாந்த், தலையில் மட்டுமல்லாது கை, கால், புருவங்களில் உள்ள முடி கூட உதிர ஆரம்பித்துள்ளது.

இதனால் மணமுடைந்த இளைஞர் பிரசாந்த் தற்கொலை  செய்துள்ளார். இது குறித்து அவர் எழுதிய தற்கொலை கடிதத்தில் தனக்கு உள்ள அனைத்து பிரச்சனைகளையும் எழுதி இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அக்கடிதத்தில் தன்னால் வீட்டை விட்டு வெளியே வர இயலவில்லை. தலை முடி உதிர்வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தான் காரணம் என எழுதியிருந்தார். இந்த இலையில், இது தொடர்பாக டாக்டர் ரபிக் மீது பிரசாந்தின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இருப்பினும் காவல்துறையினரின் விசாரணை திருப்திகரமாக இல்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் அதிகாரி அவர்கள் கூறுகையில், முதன்மை குற்றங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இருந்தாலும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்