5 ஆண்களால் சித்திரவதை செய்யப்பட்ட பெண்…! அசாம் காவல்துறையின் நடவடிக்கையால் போலிஸாரின் வலையில் சிக்கிய குற்றவாளிகள்…!

Default Image

அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர்  கைது.

அசாமில் ஒரு சிறுமியை ஐந்து ஆண்கள் சேர்ந்து கொடூரமாக சித்திரவதை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத 5 ஆண்கள் ஒரு சிறுமியை அடித்து சித்திரவதை செய்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்போது நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 5 குற்றவாளிகளின் புகைப்படங்களையும் அசாம் காவல்துறை வெளியிட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடம் இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு இந்த குற்றவாளிகளைப் பற்றிய ஏதேனும் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.  இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேரை, காவல்துறையினர்  நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கர்நாடகா காவல் ஆணையர் கமல்நாத் கூறுகையில், சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவின் காட்சிகளைப் பகிர்ந்ததால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்து வியாழக்கிழமை அசாம் காவல்துறை தகவல் அளித்தது. இந்த வீடியோ மற்றும் விசாரணையின் அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கற்பழிப்பு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட 2  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay