கேரளாவில் நடந்த சோகம்.. கண்ணாடி கதவில் சிக்கி பெண் உயிரிழப்பு!

Default Image

கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் தற்செயலாக வங்கியின் கண்ணாடி கதவில் மோதியதில், அவர் வயிற்றில் கண்ணாடித்துண்டு சிக்கி அவர் உயிரிழந்தார்.

கேரளா மாநிலம், பெரம்பவூரில் கூவப்பாடியைச் சேர்ந்தவர், பீனா ராஜு பால். 46 வயதாகும் இவர், பெரம்பவூரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் வண்டி சாவியை வண்டியிலே வைத்துள்ளார். அதை எடுக்க வெளியே செல்லும்பொது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கண்ணாடி கதவில் இடித்து கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் அந்த கண்ணாடி துண்டுகள் சிதறியது.

சிறிது நேரம் கழித்து, அவர் வயிற்றில் கண்ணாடி துண்டு கிளி அதில் ஒரு கண்ணாடி துண்டு, அந்த பெண்ணின் வயிற்றில் துளைத்தது. இதில் வயிற்றில் பலத்த காயமடைந்த அந்த பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்