கேரளாவில் உள்ள பர்ப்பிள் தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Default Image

கேரளாவில் கண்டுபிடித்த அரியவகை பர்ப்பிள் தவளையை மாநிலத்தவளையாக அறிவிக்க கேரள வனத்துறை, மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளையை முதலில் 2003 ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு இடுக்கியில் கண்டுபிடித்தார். இந்த தவளை குறித்து வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆராய்ச்சிக்காக லண்டன் பவுண்டஷன் விருது வழங்கி உள்ளது.

வாழ்நாள் முழுவதும் பூமிக்குள் வாழும் அபூர்வ தவளை இனமான பன்றி மூக்கு தவளை இனம், மழைக்காலங்களில் மட்டுமே இனப்பெருக்கத்திற்காக பூமிக்கு மேலே வரும். இனப்பெருக்கம் முடிந்தவுடன் மீண்டும் பூமிக்குள் சென்றுவிடும். இந்த பர்ப்பிள் தவளை பார்ப்பதற்கு உடல் பெரியதாகவும், கால்கள், தலை, வாய் ஆகியவை சிறிய அளவிலும் இருக்கும். இதன் எடை 170 கிராம் என்றும், 6 முதல் 9 செ.மீ. நீளமும் உடையது.

இது பூமிக்கு கீழே உள்ள மண்புழுக்களை அதன் நாக்கால் கவர்ந்திழுத்து உண்ணும்.  மர்மம் நிறைந்த இதன் வாழ்க்கை முறை இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளமுடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தவளையை அழிந்து வரும் இனங்கள் பட்டியலில் இண்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் சேர்த்துள்ளது.

மருத்துவ குணம் நிறைந்த இந்த பன்றி மூக்கு தவளையை பலரும் வேட்டையாடுகின்றனர். மேலும், கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் இது காணப்பட்டுள்ளது. அதனால், இந்த அபூர்வ இனத்தை பாதுகாக்க கேரள வனத்துறை மாநில அரசுக்கு இந்த பரப்பிள் தவளையை மாநில தவளையாக அறிவிக்க பரிந்துரைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்