நமஸ்தே என கூறி உரையை தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.!

Default Image

அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் எனும் பெயரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. தொடர்ந்து நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார்.

இதையடுத்து நமஸ்தே என கூறி உரையை தொடங்கினார் அமரிக்க அதிபர் ட்ரம்ப். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் திரளாக குவிந்துள்ளனர். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி என டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்