யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து.! 4 பேர் பலி.. 40க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்…

Default Image

உத்திரபிரதேசம், யமுனை நதிக்கரையில் பண்டா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

உத்திரபிரதேசத்தில் , யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டா பகுதியில்,  பொதுமக்கள் பொதுவாக, மறு கரைக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி ராக்ஷச பந்தன் விழா நாளான இன்று அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, அந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்