இரண்டு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இ-சஞ்சீவினி சேவை மூலம் வழங்கப்பட்டுள்ளது- மத்திய அரசு!

இ சஞ்சீவினி சேவை மூலம் இரண்டு லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இ சஞ்சீவினி சேவை மூலமாக 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சேவையை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், தமிழகத்தில் இந்த சேவை மூலம் 56,346 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
உத்திரபிரதேசம், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனைகளை பெரும் இ சஞ்சீவினி திட்டம் நாடு முழுவதும் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நான் காரணமா? இதை கேட்டு கண்ணீர் வடித்தேன்” – ஜி.கே.மணி வேதனை!
May 31, 2025
”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!
May 31, 2025