உத்திர பிரதேசத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவுக்கு பலி!

Two BJP MLAs have been killed by a corona in Uttar Pradesh.

உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கொண்டே இருக்கின்றனர். இந்நிலை ஒரு புறம் இருக்க சில மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருவதால், அத்தியாவசிய தேவை உபகரணங்கள் இல்லாமல் மருத்துவமனை திணறி வருவதுடன் ஆக்சிஜன் இல்லாமல் முழு நாடும் தவித்து வருகிறது. அதனால் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் உயிரிழக்க கூடிய நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. இதனை அடுத்து உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். லக்னோவில் உள்ள எம்எல்ஏ சுரேஷ் குமார் என்பவரும் எம்எல்ஏ ரமேஷ் சந்திரன் என்பவர்களும்  கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,இவர்கள் இருவருமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இவர்களது மறைவிற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.