நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு பேர் கைது..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துள்ளனர்.
நொய்டாவில் பிஸ்ரக் பகுதியில் நேற்று இரவு காவலர்கள் வாகன சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
திடீரென காரில் உள்ள நபர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் காவல்துறையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காரில் இருந்த இருவருக்கு காலில் குண்டடி பட்டது. உடனே போலீசார் அந்த காரை தடுத்து மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்த இருவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய அம்மாவட்டத்தின் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஆங்குர் அகர்வால், காரிலிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இருவரை கைது செய்துவிட்டோம். இந்நிலையில், காரிலிருந்து ஒருவர் தப்பி சென்றுவிட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதில் கைதான இவர்களின் பெயர் சிராஜ், ராமு. இவர்களிடம் உரிமம் இல்லாத 2 துப்பாக்கியும் சில தோட்டாக்களும் இருந்தது. அதை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025