வைரல் வீடியோ .!தூங்கி விழுந்த உபேர் கார் டிரைவரிடம் காரை வாங்கி ஓட்டிய பெண் பயணி ..!

மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர்  காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து

மும்பையைச் சேர்ந்த தேஜஸ்வினி திவ்யா நாய்க் (28) இவர் கடந்த பிப்ரவரி 21 -ம் தேதி புனேவிலிருந்து அந்தேரிக்குச் செல்ல உபேர்  காரை புக் செய்துள்ளார். இதனையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு இருந்தபோது கார் டிரைவருக்கு போன் வந்துள்ளது.

டிரைவர்  வாகனத்தை  நிறுத்தி பேசாமல் காரைஒட்டியபடியே பேசியுள்ளார்.இதனை பார்த்து தேஜஸ்வினி போனில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு காரை ஓட்டுவதில் கவனம் செலுத்துங்கள் என கூறியுள்ளார். பின்னர் கார் டிரைவர் போனை வைத்து விட்டு காரை ஒட்டியுள்ளார்.

டிரைவர் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் போதே திடீரென தூங்கி விழுந்தாக கூறப்படுகிறது. இதனால் தேஜஸ்வினி அவரை எழுப்பி வாகனத்தை ஒழுங்காக ஓட்டுமாறு கூறியுள்ளார்.பின்னர் மீண்டும் டிரைவர் தூங்கி விழுந்துள்ளார்.

பொறுத்தது போதும் என தேஜஸ்வினி டிரைவரிடம் இருந்து காரை வாங்கி ஓட்டியுள்ளார். காரை தேஜஸ்வினிடம் கொடுத்து  டிரைவர் அருகில் அமர்ந்து ஓரமாக  தூங்கியுள்ளார். டிரைவர் தூங்குவதை வீடியோ எடுத்து தேஜஸ்வினி  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ  சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

unknown node