கர்நாடகாவில் மொத்த எண்ணிக்கை 9,000-ஐ கடந்தது..இன்று 249 பேருக்கு கொரோனா.!

Default Image

கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 249 பேருக்கு கொரோனா உறுதியாகிய நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், இன்று ஒரே நாளில் 249 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,399 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 111 பேர் இன்று  குணமடைந்த நிலையில் மொத்த குணடைந்த எண்ணிக்கை 5730 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில், கொரோனாவால் இன்று 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 142  ஆக உயர்ந்துள்ளளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்க்ளில், 2,37,196 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இந்த வைரஸ் பாதிப்பால், 4,25,282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,699 பேர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்