நீட் தேர்வு முடிவுகள் !இன்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகும் – தேசிய தேர்வு  முகமை அறிவிப்பு

Default Image

நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகும் என்று  தேசிய தேர்வு  முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது.கடந்த மே மாதம்  நாடு முழுவதும்  மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இந்நிலையில் இன்று நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நீட் நுழைவு தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பை இணையத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை .
தற்போது மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு பிறகு வெளியாகும் என்று  தேசிய தேர்வு  முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் தேர்வு முடிவுகளை , என்ற இணையதளங்களில் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்