கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20CM நீளமுள்ள கத்தி விழுங்கிய நபர்.!

Default Image

கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.

ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் 20செ.மீ நீளமுள்ள கத்தி இருந்துள்ளது.

அதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலில் முழுமையாக பதிந்திருந்த கத்தியை அகற்ற மூன்று மணி நேரம் போராடி, அந்த நபரை உயிர் பிழைக்க செய்துள்ளனர். முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்து முதல் வழக்கு இதுதான் என்றும், கத்தியை அகற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் டாக்டர் கூறினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்