மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர்! அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

Default Image

மஹாராஷ்டிராவில் பெட்ரோல் பங்கிற்குள் இரண்டு பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்ட நபர்.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில், பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் கேட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் பெட்ரோல் கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு பெண் அமர்ந்திருந்த எரிவாயு நிலைய உரிமையாளரின் அறைக்குள் இரண்டு விஷ பாம்புகள் மற்றும் ஒரு எலியை விட்டுள்ளார்.

அந்த பெண் பாம்புகள் விடப்பட்ட இடத்திற்கு அருகில் அமர்ந்திருந்தார்.  இதனையடுத்து, அந்த பாம்புகள் ஒரு பையில் எடுத்து வெளியே எறியப்பட்ட பின்னர், அந்த பெண் அவரது இடத்தில் இருந்து, எழுந்து வெளியே வந்துள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்