சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு மேல் -மத்திய சுகாதாரதுறை

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்திற்கு அதிகம் என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு மற்றும் UT களுடன் கூட்டு மற்றும் கவனம் செலுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளில் குணமானவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது என்பதையும் அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14,856 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை விட இதுவரை 1,64,268 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது கொரோனாவின் தேசிய மீட்பு வீதத்தை 60.77% வரை தொடும். இப்பொழுது 2,44,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கோரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சோதனை திறன் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சோதனை ஆய்வக வலையமைப்பு தொடர்ந்து விரிவடைகிறது. அரசுத் துறையில் 786 ஆய்வகங்கள் மற்றும் 314 தனியார் ஆய்வகங்கள் இருப்பதால், நாட்டில் 1,100 ஆய்வகங்கள் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்