கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை பாத்ரூமில் அடைத்து வைத்த கணவர்!

Default Image
  • தெலுங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியை வீட்டில் உள்ள குளியலறையில் 5 நாட்களாக அடைத்து வைத்திருந்த கணவர்.
  • புத்திமதி கூறி கொரோனா பாதித்த பெண்ணை வீட்டில் தனிமை படுத்த ஏற்பாடு செய்த போலீசார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு உறவினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் கூட முன்வராத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. தங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டால் போதுமென்ற அளவிற்கு மக்கள் தற்பொழுது உயிர் வாழ்வதற்கு அச்சப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்சிரியாலா மாவட்டம் லட்செட்டிபெட்டா பகுதியை சேர்ந்த பெத்தையா என்பவரது மனைவிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது மனைவியை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறி பெத்தையா வீட்டிற்கு வெளியில் உள்ள சிறிய அளவு குளியலறையில் அவரது மனைவியை தங்க வைத்துள்ளார். மேலும் அவருக்கு போதிய அளவு உணவு கூட வழங்காமல் வீட்டுக்குள் அனுமதிக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நரசிம்மாவை அவரது கணவர் துன்புறுத்துவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நரசம்மாவை பாத்ரூமிலிருந்து மீட்டதுடன் பெத்தையாவிற்கு மனநல ஆலோசனை வழங்கி, நாராசம்மாவை அவரது வீட்டில் உள்ள தனி அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Joe Root
erode by election 2025
edappadi palanisamy mk stalin
R Ashwin -- Virat kohli
abhishek sharma varun chakravarthy
vidaamuyarchi anirudh