இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தம், மளிகை கடைக்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி!

Default Image

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இமாச்சல பிரதேசத்தில் இன்று முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மளிகை கடைகளுக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்காக மே 7ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரையிலும் இமாச்சல் பிரதேசத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல்வர் ஜெயராம் தாகூர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

அப்பொழுது மே 10ஆம் தேதி முதல் பொது போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து இன்று முதல் பொது போக்குவரத்து அனைத்தும் இமாச்சல பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் அங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான மளிகை கடைகள் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே திறக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen