தேர்வெழுத வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்…!

Default Image

கேரளாவில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கோட்டையம் எனும் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் நிதினா சென்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற நிதினா தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது வள்ளிச்சீரா பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்து அமர்ந்துள்ளார்.

இவர் நிதினாவுக்காக காத்திருந்ததாகவும், நிதினாவை இவர் ஒரு தலையாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நிதினா தேர்வு எழுதி முடித்து விட்டு வந்தனாவுடன் அபிஷேக் நிதினாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். அதன் பின்பாக பேப்பர் கட்டரை கொண்டு நிதினாவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அப்பெண்ணை அருகில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த அபிஷேக் அவ்விடத்திலேயே அமர்ந்த்து இருந்துள்ளார். அதன் பின் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்