புல்வாமாவில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!

Default Image

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

புல்வாமாவின் கம்ராசிபோரா கிராமத்தில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் அதிகாலை ஈடுப்பட்டனர். அப்போது, அதிகாரிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு வீரர்கள் காயமடைந்ததை அடுத்து காயமடைந்தவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், பின்னர் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்