லாட்டரி சீட்டு அதிர்ஷ்டத்தால் கேரளாவில் கோடீஸ்வரர் ஆன கோவில் அர்ச்சகர்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
லாட்டரி சீட்டுகளுக்கு தடையற்ற மாநிலமாக விளங்கும் கேரள மாநிலத்தில் கோவில் அர்ச்சகர் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார்.
கேரளா மாநிலம் தளிபரப்பு பகுதியைச் சேர்ந்தவர் அஜிதன். கோவில் அர்ச்சரகரான இவர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உடையவராக இருந்துள்ளார். கடந்த 2011 ம் ஆண்டு வாங்கிய லாட்டரி சீட்டில் அதிர்ஷ்டம் இவருக்கு காய் கூடியுள்ளது. அப்போது , கேரளா லாட்டரியின் முதல் பரிசான 40 லட்சமும் , 50 சவரன் நகையும் பெற்று லட்சாதிபதியாக உயர்ந்தார்.
பணம் அதிகளவு இருந்தாலும் தொடர்ந்து கோவில் அர்ச்சரகராக இருந்து வந்தார். லாட்டரி சீட்டும் விடாமல் வாங்கி வந்து இருக்கிறார்.இந்நிலையில், கேரளாவில் மழை கால லாட்டரி குலுக்கலில் அஜதன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை பரிசுத்தொகையாக 5 கோடி ரூபாயை வென்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் கோடிஸ்வரக்களில் ஒருவராக அஜிதன் முன்னேறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)