‘தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்’ – மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து….!

Default Image

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். தமிழக மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என தெரிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்