தேர்வை ஒத்திவைக்க முடியாது! ஏன்? முடியாது-காரணம் என்ன யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றம் கரார்

Default Image

யுபிஎஸ்சி என்னும் சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று  யுபிஎஸ்சி உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வருகிற அக்டோபர் 4 ந்தேதி அகிலந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று மற்றும் வட, வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் 20 பேர் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது  தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசும், தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்து உள்ளது. மேலும், தேர்வை ஏன்? ஒத்திவைக்க முடியாது? என்பதற்கான காரணங்களை பட்டியலிட்டு, பிரமாணப் பத்திரம்  தாக்கல் செய்ய யுபிஎஸ்சிக்கு உச்சநீதிமன்றன உத்தரவிட்டது.மேலும் வழக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Sanju Samson
DMK MP A Rasa Speak about Waqf Act 2025
CM MK Stalin writes to PM Modi
Union minister Kiran Rijiju
Yashasvi Jaiswal
Encounter tn