டெல்லியில் ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் கைது..!
டெல்லியில் அரசு பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
டெல்லியின் இந்தர்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் செய்முறைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பூதேவ் என்ற ஆசிரியர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். செய்முறைத் தேர்வின் போது ஒரு மாணவர் ஆசிரியரை கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அந்த ஆசிரியருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த மாணவனை கைது செய்தனர்.
மேலும் அவனிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். காயமடைந்த ஆசிரியர் பூதேவ் பி.எல்.கே.கபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.