இன்று மாலை உருவாகிறது நிசர்கா புயல்.. தயார் நிலையில் மகாராஷ்டிரா!

Default Image

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும், அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்னும் 12 மணிநேரத்தில் (இன்று மாலை) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த புயல், நாளை மகாராஷ்டிரா-குஜராத் இடையே கரையை கடக்கவுள்ளது.

மேலும், இந்த தாழ்வு மண்டலம், இன்று காலை நிலவரப்படி, மும்பைக்கு தென்மேற்க்கே 550 கி.மி. தொலைவிலும், குஜராத்திலிருந்து 770 கி.மி. தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த புயலால் வட கேரளா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மணிக்கு 95-105 கி.மி. வரை காற்று வீசுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயலை எதிர்கொள்ள மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்