யோகா குருவிற்கு “பதஞ்சலி பொருள்கள்” என்றால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளுக்கு “ஸ்ரீஸ்ரீ பொருள்கள்” ; வியாபாரிகளாக மாறிய குருஜிக்கள்…!!
யோகா குருவான பாபா ராம்தேவ், பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது.இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன.
இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார்.பின்னர் இது அவரது அரசியல் பலத்தை கொண்டு சரி செய்யப்பட்டது.
நிலம் ஏலம் எடுத்ததில் ரூபாய் 300 கோடி டிஸ்கவுண்ட். இவருடைய சொத்துமதிப்பு 950 கோடி வளர்ச்சி என பாபா ராம்தேவ்விற்கு மத்திய பாஜக அரசு அத்தனை உதவிகளை செய்துள்ளது என புதிய ஒரு முறைகேடு இவர் மீது வைக்கப்பட்டது.
இந்நிலையில் யோகா குருவைத்தொடர்ந்து இயற்கை பொருள்கள் எண்ணும் பெயரில் தரமற்ற பொருள்களை விற்று இந்தியாவின் முன்னணி பணக்காரராக மாறத்துடிக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்ற பாபநாச சாமியார். மேலும் கங்கையை அசுத்த படுத்திய சாமியார் என்பது குறிப்பிடத்தக்கது…
யோகா குருவிற்கு “பதஞ்சலி பொருள்கள்” என்றால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சுவாமிகளுக்கு “ஸ்ரீஸ்ரீ பொருள்கள்” ஆகும்.