புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட சிறப்பு காவல்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி…!

Default Image

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமது மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில், அவந்திபோரா பகுதியில் உள்ள ஹரிபரிகாமில் உள்ள சிறப்பு காவல் துறை அதிகாரி ஃபயாஸ் அஹமதின் வீட்டிற்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் பயங்கரவாதிகள் நுழைந்து, துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் மற்றும் அவரது மகள் ராபியா ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஃபயாஸ் அஹமது, அவரது மனைவி ராஜ பேகம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராபியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்