எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி வருகிற ஆக.20-இல் ஆலோசனை..!

Default Image

வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டனர். இந்த ஒற்றுமையை தொடர்ந்து எடுத்துச்செல்லும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி மூலமாக ஆலோசிக்க உள்ளார்.

இந்த கூட்டம் அன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்