கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட மகன்.! தாய் புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த கோவா போலீஸ்.!

Default Image

கற்களால் தனது மகனை தாக்கி கொன்றதாக தாயார் புகார் அளித்ததை அடுத்து, கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி அதிகாலை 2.17 மணியளவில் அபினா யேஷ்வந்த் சங்கல்கர் என்ற தாயார் தனது மகனான அவினாஷ் யேஷ்வந்த் சங்கல்கரை தெரியாத நபர் ஒருவர் கற்களால் தனது மகனின் தலையிலும், உடலின் மற்ற பகுதிகளிலும் தாக்கி கொலை செய்ததாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதனை தொடர்ந்து கொலை செய்த நபரை கோவா போலீஸ் அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து கோவா காவல்துறை கண்காணிப்பாளர்(SP) ஷோபித் சக்சேனா கூறியதாவது,தாய் புகார் செய்த அடுத்த நொடியிலிருந்து கோவாவில் உள்ள பாபாவின் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) கஜனன் பிரபுதேசாய் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் துஷார் ஆகியோர் பிஐ சந்தேஷ் சோடங்கரின் உதவியுடன் 5 குழுக்களை அமைத்து கொலை குறித்த விசாரணையை தொடங்கியதாக தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கில் பல நபர்கள் விசாரிக்கப்பட்டதாகவும், மின்னணு மற்றும் தடவியல் சான்றுகள் சேகரிக்கப்பட்டதாகவும் கோவா எஸ்பி கூறினார். அதனையடுத்து கோவாவை சேர்ந்த முகேஷ் சியோ விநாயக் தேவ்சேகர் என்ற 48 வயதான நபர் தான் குற்றவாளி என்பதை போலீசார் புகார் செய்த அடுத்த 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்தனர் . அதனையடுத்து அவரிடம் நடந்த தொடர் விசாரணையில் தான் அவினாஷை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இறந்தவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது சண்டையாகி கொலைக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த கொலை குறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்