அதிர்ச்சி : மொபைல் ஃபோன் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்ய தவறிய தந்தை…! மகன் எடுத்த விபரீத முடிவு…!

Default Image

மத்திய பிரதேசத்தில் தந்தை மொபைல் ஃபோன் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யாததால், மகன் தூக்கிட்டு தற்கொலை.  

இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் மொபைல் போனுக்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில் இளம் குழந்தைகள் முதல் இளம் வாலிபர்கள் வரை பலர் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் தனது தந்தை  மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  திங்கட்கிழமை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது சிறுவன் மொபைல் போனுக்கு அடிமையாகி இருந்ததும், டேட்டா பேக் காலாவதி ஆன பிறகு  தந்தை ரீசார்ஜ் செய்யாமல் இருந்ததும் தான் அவரது மரணத்திற்கு காரணம் என  தெரியவந்துள்ளது.

கூலித் தொழிலாளியாக பணிபுரியும் அந்த சிறுவனின் தந்தை தனது குடும்பத்தை நடத்துவதுவதற்கே நிதி பிரச்சனையை எதிர்கொண்டு வரும் நிலையில் மொபைல் போனுக்கு டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்