Sensex: சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்வு, நிஃப்டியும் புதிய உச்சம்.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 63,342 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,827 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்ந்து 63,342 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,827 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 242 புள்ளிகள் அல்லது 0.38% என 63,342 ஆக உயர்ந்து இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டியும் புதிய உச்சம் தொட்டுள்ளது, 68 புள்ளிகள் அல்லது 0.37% உயர்ந்து 18,827 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.

டெக் மஹிந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் ஆகியவை நிஃப்டியில் அதிக லாபம் பெற்ற நிறுவனங்களாகவும், பஜாஜ் ஆட்டோ, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்யுஎல், மாருதி சுஸுகி மற்றும் டாடா நுகர்வோர் தயாரிப்புகளின் பங்குகள் இன்று சரிந்தன.