இளைஞர்களுடன் இணைந்து கபடி விளையாடிய ரோஜா…!

Default Image

ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார்.

நடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர். இந்நிலையில், நகரி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைக்குமாறு ரோஜா சென்று இருந்தார்.

அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். இவர்களின் வரவேற்பில் உற்சாகமடைந்த ரோஜா இளைஞர்களுடன் திடீரென்று களத்தில் இறங்கி கபடி விளையாடி உள்ளார். ரோஜாவின் இந்த செயல் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்