தேவையை விட அதிகமாகவே ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…!

Default Image

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும்  ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டதால், அந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. பலர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவால் பாதிப்படைந்து கருப்பை பூஞ்சை தொற்றால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ததன் விளைவாக அதன் தேவையும் அதிகரித்தது.

ஆனால் ரெம்டெசிவிர் மருந்தின் இருப்பு குறைவாக இருந்த காரணத்தால் 40 புதிய உற்பத்தி மையங்களை தொடங்கி உற்பத்தியை அதிகரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 22 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போதும் 62 மையங்களில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்த மருந்தின் தேவையை விட இந்த மருந்து உற்பத்தி அதிகமாகி உள்ளது எனவும், அது மட்டுமல்லாமல் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மருந்துகளை எப்படி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்