பேச்சு வார்த்தைக்கு தயார்…! ஆனால் எங்களது கோரிக்கையில் மாற்றம் இருக்காது…!

Default Image

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எந்த பேச்சுவார்த்தையிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் கூறுகையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்