கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!

பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பத்தில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

royal challengers bengaluru stampede

பெங்களூரு :ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற முன்னெடுப்பும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம், பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியடைய செய்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கும் ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆர்சிபி நிர்வாகம் எக்ஸ் பதிவில், ”பெங்களூருவில் நேற்று நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்சிபி குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனையையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மரியாதை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக, இறந்தவர்களின் பதினொரு குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

கூடுதலாக, இந்த துயர சம்பவத்தில் காயமடைந்த ரசிகர்களை ஆதரிப்பதற்காக ஆர்சிபி கேர்ஸ் என்ற நிதியும் உருவாக்கப்படுகிறது. நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் எங்கள் ரசிகர்கள் எப்போதும் இதயத்தில் இருப்பார்கள். நாங்கள் துக்கத்தில் ஒற்றுமையாக இருப்போம்” என்று குறிப்பிட்டுள்ளது.

unknown node
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – ஆர்சிபி.!