பிரதமர் மோடி ராஜஸ்தான் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை டேங்கர் லாரி ஒன்று பேருந்து மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் 12 பேர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பார்மர் மற்றும் ஜோத்பூர் நெடுஞ் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
unknown node