தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை.! 30 நிமிடங்கள் இனி மக்களுக்கானது.!

தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த பொதுநலன் குறித்த நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த பொதுநலன் குறித்த நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,  தினமும் 30 நிமிடங்கள் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது தினமும் 30 நிமிடங்கள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.