எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்.!

Default Image

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்த நிலையில், எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், வசந்தகுமார் எம்.பியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. எச்.வசந்தகுமாருடன் உரையாடியதில், தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். வணிகம் மற்றும் சமூக சேவையில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. வசந்தகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்