அரசுக்காக தனது ஓராண்டின் 30 சதவிகித சம்பளத்தை விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு!

Default Image

கொரோனா வைரஸால் அரசின் நெருக்கடி அதிகரித்திருப்பது அனைவரும் அறிந்ததே,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ஓராண்டு சம்பளத்திலிருந்து 30 சதவிகிதத்தை அரசுக்கு கொடுக்க உள்ளார். 

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரதமர் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் படியாகவும்,  நிவாரணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பலாம் எனவும் கூறியிருந்தார். 

இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு பல நடிகர்கள் மற்றும் அமைச்சர்கள் நிதி அளித்திருந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களும் தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்திருந்தார். 

தற்பொழுதும் அரசின் நெருக்கடி அறிந்து ஜனாதிபதி செய்த செயலுக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து வந்துள்ள அறிக்கையில், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் தனது சம்பளத்தில் 30 சதவீதத்தை, ஒரு வருடத்திற்கு விட்டு கொடுக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார். 

வெளியில் செல்லும் செலவை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆடம்பரமான போக்குவரத்து திட்டங்களை குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

மேலும், உள்நாட்டு செலவை குறைக்கவும் முடிவு செய்துள்ளார்.அதன் மூலம் சமூக விதிமுறைகளை பேணலாம் எனவும் கூறியுள்ளார். வரவேற்பு நிகழ்ச்சிகள் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும் எனவும், வருகைக்கான ஆட்களை குறைத்தே கூப்பிடபடும் எனவும்,  உணவு தேவைகளை குறைக்கலாம் எனவும் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan