நீட் தேர்வு ஒத்திவைப்பு – மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

Default Image

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மே 3 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக  தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, ஜனவரி 1ம் தேதி வரை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்