TANCET தேர்வு ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

TANCET தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) 2023-க்கான தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, M.E, M.B.A, M.TECH, M.ARCH, M.PLAN ஆகிய படிப்புகளுக்கான TANCET -2023 தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. TANCET -2023 தேர்வு பிப்ரவரி 25, 26-ல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வுக்கான புதிய தேதி tancet.annauniv.edu என்ற … Read more

#BREAKING: தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைப்பு!

அக்.1-ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தஹள்ளிவாய்ப்பு என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறித் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் … Read more

#BREAKING: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதல்நிலை தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு. ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு நவ.19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மாணவர்கள் கவனத்திற்கு! பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு!

நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம். ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் … Read more

#Breaking:பாக்.பிரதமருக்கு எதிரான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி வைப்பு?!

பாக்.பிரதமர் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றம் வரவில்லை என தகவல். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில்,இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் யாரும் வாக்கெடுப்புக்கு நாடாளுமன்றம் வரவில்லை என்றும்,இதனால்,வாக்கெடுப்பு அடுத்த வாரத்துக்கு தள்ளி போகலாம் என்றும் பாகிஸ்தான் சட்டத்துறை அமைச்சர் க்பவத் சவுத்ரி தகவல் தெரிவித்துள்ளார்.இதனைத் … Read more

பிரதமர் மோடியின் அமீரக பயணம் ஒத்திவைப்பு!

ஓமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் ஒத்திவைப்பு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது. துபாய் எக்ஸ்போவில் (கண்காட்சி) பங்கேற்பதற்காக ஜனவரி 6-ஆம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்லவிருந்த நிலையில், தற்போது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளதாவது: கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதம் நடக்க இருந்த கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவானது அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கபடுவதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் அவர் கடந்த சில வாரங்களாக  மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். இந்நிலையில் கோல்கத்தா சர்வதேச … Read more

சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.!

மனோஜ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிறையிலுள்ள சயான், மனோஜ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய 4 சாட்சிகளை மிரட்டியுள்ளதால், ஜாமீன் தந்தால் மற்ற சாட்சிகளையும் மிரட்டக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணை துரிதமாக … Read more

ஆஸ்கர் விருது விழா.! 4- வது முறையாக ஒத்தி வைப்பு.!

ஆஸ்கர் விருது வழங்கும் விழா 4- வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. உலக சினிமா துறையின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 93 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகின்ற 2021 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 25 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், 1981 … Read more

ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைப்பு.!

13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது மேலும் 19 நாட்கள் அதாவது மேல் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு  நீட்டிப்பதாக அறிவித்தார் . இதனால் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் மே 3-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என … Read more